உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மது விற்ற 2 பேர் கைது

Published On 2022-02-20 06:46 GMT   |   Update On 2022-02-20 06:46 GMT
மது விற்ற உரல் பட்டியைசேர்ந்த ஜோதி கண்ணன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உடுமலை:

உடுமலை சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஏரிப்பாளையம் பகுதியில் புக்குளம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது ஏரிபாளையத்தை சேர்ந்த முருகேசன் (வயது 52) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார்  கைது செய்து 18 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல்  மலையாண்டிபட்டினம் பகுதியில் மது விற்ற உரல் பட்டியைசேர்ந்த ஜோதி கண்ணன் (37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News