உள்ளூர் செய்திகள்
கண்ணாடித் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தலைவர்கள் சிலைகளுக்கு கண்ணாடி தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்

Published On 2022-02-20 09:05 GMT   |   Update On 2022-02-20 09:05 GMT
தலைவர்கள் சிலையை சேதப்படுத்திவிடாமல் தடுக்க, சிலைகளுக்கு இரு புறமும் ஆளுயர கண்ணாடி பதிக்கப்பட்டு வருகிறது. கல் உள்ளிட்ட பொருட்களை எரிந்தாலும் எளிதில் உடையாத வண்ணம் கண்ணாடி வலிமை மிக்கதாக இருக்கும்.
ஈரோடு:

தலைவர்கள் சிலையை சேதப்படுத்திவிடாமல் தடுக்க, சிலைகளுக்கு இரு புறமும் ஆளுயர கண்ணாடி பதிக்கப்பட்டு வருகிறது. கல் உள்ளிட்ட பொருட்களை எரிந்தாலும் எளிதில் உடையாத வண்ணம் கண்ணாடி வலிமை மிக்கதாக இருக்கும். 

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அண்ணா, பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆகிய தலைவர்களின் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் அரசியல் கட்சியினர் வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி இதே பகுதியில் அம்பேத்கர் சிலையும் வைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில் சமீபகால மாக தலைவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது, அவமதிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. 

இதனைத் தவிர்க்கும் வகையிலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தலைவர்கள் சிலைகளை பாதுகாக்கும் வகையில் சிலைகளை சுற்றி கண்ணாடித் தடுப்பு அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
Tags:    

Similar News