உள்ளூர் செய்திகள்
மரணம்

கடலூர் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி பலி

Published On 2022-02-20 10:56 GMT   |   Update On 2022-02-20 10:56 GMT
கடலூர் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர்:

கடலூர் அருகே மருதாடு சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை தோட்டப்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் மேலே வராததால் அங்கு உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஏரியில் இறங்கி தேடி பார்த்தனர்.

அப்போது அய்யப்பன் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அங்கு உள்ளவர்கள் அய்யப்பனை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் அப்போது அய்யப்பன் சேற்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News