உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினவிழா

Published On 2022-03-02 08:32 GMT   |   Update On 2022-03-02 08:32 GMT
உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினவிழா நாளை தொடங்குகிறது
கன்னியாகுமரி:

நாளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு உகப்படிப்பும், 7 மணிக்கு மங்கள இசையும், பகல் 12 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், மாலை 5 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், இரவு 8 மணிக்கு முகிலன்விளை பிரம்மசக்தி அம்மன் பஜனை குழுவினரின் பஜனையும்,
நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், 1 மணிக்கு அய்யா வைகுண்டரின் பிறப்பும் தாலாட்டும் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், 9 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், பகல் 12 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், மாலை 3 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மாபெரும் அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடையும் உகப்படிப்பும், நடைபெறுகிறது.

அவதார தின விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் என்.பிச்சைப்பழம் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News