உள்ளூர் செய்திகள்
கவுன்சிலர்கள் பதவியேற்பு

நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு

Published On 2022-03-02 11:33 GMT   |   Update On 2022-03-02 11:33 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, ராமேசுவரம் நகராட்சிகளில் தலா 10 ஆண்கள், 10 பெண்கள், ஆதிதிராவிட பெண் தலா ஒருவர் என 42 பேர், ராமநாதபுரம் நகராட்சியில் 15 ஆண்கள், 16 பெண்கள், ஆதிதிராவிடர் பெண் ஒருவர், ஆதிதிராவிடர்(பொது) ஒருவர் என 33 பேர், பரமக்குடி நகராட்சியில் 16 ஆண்கள், 15 பெண்கள், ஆதிதிராவிட பெண் 2 பேர், ஆதிதிராவிடர்(பொது) 3 பேர் 36 என 111 பேர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். 

மண்டபம் பேரூராட்சியில் 9 ஆண்கள், 8 பெண்கள், ஆதிதிராவிட பெண் ஒருவர் என 18, அபிராமம் பேரூராட்சியில் 7 ஆண்கள், 8 பெண்கள், கமுதி பேரூராட்சியில் 6 ஆண்கள், 8 பெண்கள், ஆதிதிராவிடர் ஒருவர் என கவுன்சிலர்களாக வெற்றிபெற்றனர். 

முதுகுளத்தூர் பேரூராட்சியில் 5 ஆண்கள், 6 பெண்கள், ஆதிதிராவிட பெண் 2 பேர், ஆதிதிராவிடர் (பொது) இருவர் என 15 பேர், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 6 ஆண்கள், 7 பெண்கள், ஆதிதிராவிட பெண் ஒருவர், ஆதிதிராவிடர் (பொது) ஒருவர் என 15பேர், சாயல்குடி பேரூராட்சியில் 6 ஆண்கள், 7 பெண்கள், ஆதிதிராவிட பெண் ஒருவர், ஆதிதிராவிடர் (பொது) ஒருவர் என 15 பேர், தொண்டி பேரூராட்சியில் 6 ஆண்கள், 6 பெண்கள், ஆதிதிராவிட பெண் இருவர், ஆதிதிராவிடர் (பொது) ஒருவர் 15 என 15 பேர் கவுன்சிலர்களாக வெற்றிபெற்றனர். 

4  நகராட்சிகளில் 111 கவுன்சிலர்கள், 7 பேரூராட்சிகளில் 108 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
Tags:    

Similar News