உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

இரணியல் சந்திப்பில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-04-12 07:59 GMT   |   Update On 2022-04-12 07:59 GMT
இரணியல் சந்திப்பில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
கன்னியாகுமரி:

இரணியல் பேரூராட்சியில் சாதரணக் கூட்டம் தலைவர் ஸ்ரீ கலா முருகன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் லட்சுமி அம்மாள் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இரணியல் சந்திப்பு அருகே அமைந்துள்ள மதுக்கடை அனைத்து பொது மக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. பள்ளி குழந்தைகள் பெண்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

மேலும் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மதுக்கடையினை அகற்றி தர மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News