உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஆலாந்துறையில் அடி-தடி,5 பேர் கைது

Published On 2022-04-12 09:39 GMT   |   Update On 2022-04-12 09:39 GMT
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
 
கோவை ஆலாந்துறை கலியகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன்.  இவர் சம்பவத்-தன்று குடிபோதையில் தனது நண்பர் சுமன் (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில்  ஆலாந்துறை  மாரியம்மன் கோவில் அருகே வந்தார்.அப்போது அங்கு நின்று இருந்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் குருமூர்த்தி (18), ராமர் (20) என்பவர்கள் மீது மோதினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த   17 வயது சிறுவன்,  குருமூர்த்தி, ராமர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்த 17 வயது சிறுவனை தகாத வார்த்தைகளால் திட்டி தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்தினர்.இதனை பார்த்த சுமனும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குருமூர்த்தியை குத்தினார். பின்னர் 5 பேர் கும்பலும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 5 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் கத்தி குத்தில் காயம் அடைந்த 17 வயது சிறுவனையும், குருமூர்த்தியையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.17 வயது சிறுவன் மற்றொரு 17 வயது சிறுவன்  குருமூர்த்தி, ராமர் மீது புகார் அளித்தார். இதேபோன்று குருமூர்த்தியும் 17 வயது சிறுவன் மற்றும் சுமன்  மீது புகார் அளித்தார். இதையடுத்து ஆலாந்துறை போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News