உள்ளூர் செய்திகள்
சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

சண்டே மார்க்கெட் வியாபாரிகள் மறியல்

Published On 2022-05-08 08:25 GMT   |   Update On 2022-05-08 08:25 GMT
அடிக்காசு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுவையில் சண்டே மார்க்கெட்டில் கடை போடுவதற்கு நகராட்சி சார்பில் அடிக்காசு வசூலிக்கப்படுகிறது. 

அதன்படி கடையின் அளவிற்கேற்ப ரூ.10 முதல் ரூ.20 வரை வசூல் செய்யப்படும். ஆனால் தற்போது ரூ.30 முதல் ரூ50 வரை அடிக்காசு உயர்த்தப்பட்டுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகளை போடாமல் நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஏ. ஐ. டி.யூ.சி. சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற  போராட்டத்திற்கு சங்க கவுரவத் தலைவர் துரை செல்வம், தலைவர் பாபு, செயலாளர் கார்த்திக், பொருளாளர் தயாளன், ஆகியோர் தலைமை தாங்கினர். 

சண்டே மார்க்கெட் சங்க நிர்வாகிகள் இக்பால் ,தோனி, பிரகாஷ், சங்கர், சிலம்பரசன், நாகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை குறைத்தால்  மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என வியாபாரிகள் உறுதிப்பட தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News