உள்ளூர் செய்திகள்
அறிவிப்பாணை பள்ளிவாசலில் ஒட்டப்பட்ட காட்சி.

வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் காதர்பேட்டை பள்ளிவாசல்

Published On 2022-05-08 08:48 GMT   |   Update On 2022-05-08 08:48 GMT
பள்ளி வாசல் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
திருப்பூர்:

திருப்பூர் காதர்பேட்டையில் அஹ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் மதரசா உள்ளது. இந்த பள்ளி வாசல் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் பள்ளி வாசல்,மற்றும் மதரசா ஆகியவை தமிழ்நாடு  வக்பு வாரிய கட்டுப்பாட்டில் கொண்டு  வரப்பட்டு அதற்கான அறிவிப்பாணை பள்ளிவாசலில் ஒட்டப்பட்டது. 

கிராம நிர்வாக அலுவலர் சுபாஷ் முன்னிலையில் திருப்பூர்  வக்பு வாரிய அலுவலர் அன்வர்அலி  பள்ளிவாசலின் நிர்வாக பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இந்த பள்ளிவாசலுக்குரிய குத்தகைகள், வாடகைகளை வக்பு  வாரிய நிர்வாகத்தில் இனி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News