உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்.

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

Published On 2022-05-08 08:48 GMT   |   Update On 2022-05-08 08:48 GMT
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
அரியலூர்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பட்டக்கல் தெரு அம்பேத்கர் நகர் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் மாதவன் (27) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள் ஐஸ்வர்யா வயது 23 என்பவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மாதவனும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்ய முடிவெடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மாரியம்மன் கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை செய்து பிரித்து விடுவார்களோ? என எண்ணிய புதுமண தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.  

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்து பெண்ணின் பெற்றோரிடம் திருமணம் சம்பந்தமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தனர். இருவரும் மேஜர் என்பதால் பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கு  காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News