உள்ளூர் செய்திகள்
மணமேல்குடியில் பள்ளி–மேலாண்மைக்குழு மறு–சீரமைப்பு கூட்டம் நடை–பெற்ற போது எடுத்த படம்.

மணமேல்குடியில் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டம்

Published On 2022-05-08 08:57 GMT   |   Update On 2022-05-08 08:57 GMT
மணமேல்குடி வேட்டணிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் வேட்டணிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழு மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையில்   நடைபெற்றக் கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு)சிவயோகம் முன்னிலை பொறுப்பு வகித்தார்.

பள்ளி மேலாண்மைக் குழு புதிய தலைவராக பாண்டியம்மாள், துணைத் தலைவராக கவிதா மற்றும் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர்  சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  மேரிவெர்ஜின் உதயா நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News