உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவையில் குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

Published On 2022-05-08 10:29 GMT   |   Update On 2022-05-08 10:29 GMT
5 பேர் மீதும் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, போக்சோ, என பல்வேறு வழக்குகள் உள்ளன.
கோவை:

கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர் நாராயணசாமி லேஅவுட் வீதியைச் சேர்ந்த புள்ளி பிரவீன், கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத், சம்பத் வீதியைச் சேர்ந்த சூர்யா, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற கருப்பு சூர்யா ஆகிய 5 பேர் மீதும் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, போக்சோ, என பல்வேறு வழக்குகள் உள்ளன. 

தொடர்ந்து அவர்களால் பொது அமைதிக்கு சீர்கேடு இருந்து வந்த காரணத்தினால், சிறையில் இருக்கும் 5 பேரையும் குண்டர்சட்டத்தில் அடைக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்திரவிட்டார். இதையடுத்து அந்த உத்தரவு நகலை சிறையில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த தீபக் என்பவர் அடிதடி வழக்கில் கைதாகி தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்த நிலையில் மீண்டும் விதியை மீறி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காத 110 பிரிவின் கீழ் ஒரு வருட கட்டாய தண்டனையில் சிறையில் அடைக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News