உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மார்த்தாண்டத்தில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை

Published On 2022-05-12 07:20 GMT   |   Update On 2022-05-12 07:20 GMT
மார்த்தாண்டம் கல்வி நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது
கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில்    புகுந்து பீரோவில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொள்ளை பற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த போது, அதில் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.

அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிப்பு காமிராவில் பதிவான உருவத்தை வைத்து விசாரணை நடத்திய போது, கொள்ளையன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று உள்ளனர்.
Tags:    

Similar News