உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ராணிப்பேட்டை பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-05-12 09:47 GMT   |   Update On 2022-05-12 09:47 GMT
ராணிப்பேட்டை பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா தாராபடவேடு கிராமம் குலக்கரை தெருவை சேர்ந்த புகழேந்தி. இவரது மகன் பலராமன் (எ) பாலா (27) என்பவரை வழிபறியில் ஈடுபட்டதாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பலராமனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவட்டார். பின்னர் அவரை  சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News