உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோட்டார் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2022-05-12 09:48 GMT   |   Update On 2022-05-12 09:48 GMT
கோட்டார் போலீசில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
நாகர்கோவில்:

கோட்டார் மேல புதுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல் ராசிக் (வயது 27) இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர்  கோட்டார் போலீசில் புகார் செய்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முகம்மது அப்துல் ராசிக்கை தேடிவந்தனர். இந்த நிலையில் முகமது அப்துல் ராசிக், நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்த சுஜிதா (27) என்பவருடன் கோட்டார் போலீசில் தஞ்சம் அடைந்தார். 

தங்கள் இருவருக்கும் இடையே கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டதாகவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும்   பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து இரு வீட்டாருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்போது முகமது அப்துல் ராசிகின்  பெற்றோர் மகனை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் சுஜாதாவை கரம் பிடித்ததால்  வர முடியாது என்று மறுப்பு தெரிவித்தார். 

சுஜாதாவின் தாயாரும் மகளை அழைத்தார். அவரும் அவருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News