உள்ளூர் செய்திகள் (District)
பாவூர்சத்திரத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பாவூர்சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை, திருட்டில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வீ.கே.புதூர்:
பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த விஸ்வநாததாஸ் நகரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 20), மேலப்பாவூரை சேர்ந்த சரவணன்(20), பாவூர்சத்திரம் பகுதியிலுள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குறும்பலாப்பேரியைச் சேர்ந்த சேர்மதுரை (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தார்.