உள்ளூர் செய்திகள் (District)
சாயந்து விழும் அபாய நிலையில் உள்ள பி.எஸ்.என்.எல். பெட்டி

சாய்ந்து விழும் நிலையில் பி.எஸ்.என்.எல். பெட்டி

Published On 2022-06-03 10:05 GMT   |   Update On 2022-06-03 10:05 GMT
சுரண்டையில் உள்ள சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ள பி.எஸ்.என்.எல். பெட்டியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சுரண்டை:

சுரண்டையில் இருந்து சங்கரன்கோவில் ெசல்லும் சாலையில் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கட்டுப்பாட்டு பெட்டி சாய்ந்த நிலையில் உள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகள் அருகில் நின்று பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். அவர்கள்  அங்கு நிற்கும்போது ஒரு வித அச்சத்துடனே நிற்கின்றனர்.

இதனருகே ஏ.டி.எம். உள்ளதால் பொதுமக்கள் பலர் வந்து பணம் எடுக்க அச்சத்தில் செல்கின்றனர்.

எனவே சாய்ந்த நிலையில் சேதமாக உள்ள பெட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News