உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடிய 3 பெண்கள் கைது

Published On 2023-11-09 06:53 GMT   |   Update On 2023-11-09 06:53 GMT
  • தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்தனர்.
  • கையும் களவுமாக பிடித்த உரிமையாளர் நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 3 பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (34). இவர் போலீஸ் நிலையம் அருகே கோல்டு, கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த கணேஷ்பாண்டி நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.

போலீசார் விசா ரணையில் அந்த பெண்கள் மதுரை மாவட்டம் விக்கிர மங்கலம் வடகாட்டுப்ப ட்டியை சேர்ந்த போயாண்டி மனைவி ராக்கம்மாள் (60), விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஜெகன் மனைவி விஜயா (58), உசிலம்பட்டி கீழபுதூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி நதியா (38) என தெரியவந்தது.

3 பெண்களையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் மீது மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News