உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் பெண்களை குறி வைத்து பணம் திருடிய 3 பெண்கள் கைது

Published On 2023-05-21 09:34 GMT   |   Update On 2023-05-21 09:34 GMT
  • கட்டப்பையில் வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.
  • 3 பெண்கள் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி ரோகினி (வயது32).

சம்பவத்தன்று இவரும் இவரது கணவரும் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த பெண்கள் 3 பேர் ரோகினி கட்டப்பையில் வைத்து இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.

இதனை பார்த்த ரோகினி சத்தம் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுமதி என்ற லட்சுமி (22), செல்வி (25), மஞ்சு(28) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் காரமடையை சேர்ந்த சுஜிதா (36) என்ற பெண்ணிடம் ரூ.26 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 3 பெண்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News