உள்ளூர் செய்திகள் (District)
- சேலம் ஜாகீர் அம்மா பாளையம் ஜீவா நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அப்போது கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா போலீசாரிடம் சிக்கியது.
சேலம்:
சேலம் ஜாகீர் அம்மா பாளையம் ஜீவா நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சூரமங்கலம் போலீ சார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா போலீசாரிடம் சிக்கியது. போலீசார் நடத்திய விசாரைணயில் அந்த கஞ்சாவை அங்கு பதுக்கி வைத்து பொது மக்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடை வியாபாரியான பாஸ்கரன் 48 என்பவரையும் கைது செய்தனர்.