உள்ளூர் செய்திகள் (District)

42 விநாடிகளில் 35 நா பிறழ் வாக்கியங்கள்: இரண்டாம் வகுப்பு மாணவி உலக சாதனை

Published On 2022-12-16 12:16 GMT   |   Update On 2022-12-16 12:16 GMT
  • மாணவியின் சாதனை மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
  • சாதனை படைத்த மாணவி ரிதன்யாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் - கனிமொழி தம்பதியரின் மகள் பி.ரிதன்யா (வயது 7). அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், 42 விநாடிகளில், 35 ஆங்கில நா பிறழ் வாக்கியங்களை (டங் டிவிஸ்டர்) கூறி உலக சாதனை படைத்தார்.

இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை' ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது. சாதனை படைத்த மாணவி ரிதன்யாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் திருஞானம், தாளாளர் தேன்மொழி ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பங்கேற்று, மாணவி ரிதன்யா மற்றும் அவர்களது பெற்றோர்களை வெகுவாக பாராட்டி கவுரவித்தனர்.

Tags:    

Similar News