உள்ளூர் செய்திகள்

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2023-02-02 09:31 GMT   |   Update On 2023-02-02 09:31 GMT
  • ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனார்.
  • அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த பெருங்குடி மேலத்தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (வயது23).

இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

அரித்துவாரமங்கலம் மேல காலனியை சேர்ந்த கார்த்தி (35),சுதாகர் (34), ராஜேந்திரன் (60) ஆகிய 3 பேரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

பின்னர் குண்டர் சட்டத்தில் விக்னேஷ், கார்த்தி, சுதாகர், ராஜேந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News