உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் பாக்கிய நகர் மாரியம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு தேர் திருவிழா
- ஊர்வலத்தில் காளி வேடமணிந்து 5 அடி வேல் குத்தி வந்தது அனைவரையும் கவர்ந்த்து.
- நிறைவாக மாவிளக்கு ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நடைபெற்றது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பாக்கிய நகர் மாரியம்மன் கோவிலில் 46-ம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் பறவை காவடி பூங்குண்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் அக்கினி சட்டி, பால் குடத்துடன் ஊர்வலம் நடத்தி அழகு குத்தி பறவை காவடியுடன் கோவிலை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் காளி வேடமணிந்து 5 அடி வேல் குத்தி வந்தது அனைவரையும் கவர்ந்த்து.
மாலையில் பொது மேடையில் உள்ளூர் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக மாவிளக்கு ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நடைபெற்றது.