உள்ளூர் செய்திகள் (District)
- சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஆந்திர மாநிலம் துணி பகுதியில் இருந்து 6 கிலோ கஞ்சா வாங்கி கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
சேலம்:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் இரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் முத்துவேல், கண்ணன், சக்திவேல், பாரதிராஜா ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது எஸ்.9 கோச்சில் பயணம் செய்த கேரளா மாநிலம் பாலகோட்டை சேர்ந்த அருண்குமார் (வயது32) என்பவரின் சொல்டர் பேக்கை சோதனை செய்தபோது அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அருண்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் துணி பகுதியில் இருந்து 6 கிலோ கஞ்சா வாங்கி கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.