உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு செய்த 6 பேர் கைது

Published On 2023-07-05 09:47 GMT   |   Update On 2023-07-05 09:47 GMT
  • வாலிபர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டனர்.
  • சம்பவம் குறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்ததில், காந்தி நகரைச் சேர்ந்த அப்துல் (வயது19), சாந்தி நகரைச் சேர்ந்த அமாரன் (20), கிருஷ்ணா காலனியைச் சேர்ந்த ஜிப்மர் (19), புதிய வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சித்திக் (19) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று மத்திகிரி போலீசார் டைட்டன் டவுன்ஷிப் மற்றும் ஐ.டி. பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் பொதுமக்களுக்கும், போக்குவரத்து இடையூறு செய்தனர். உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், ஓசூர் ராம்நகரைச் சேர்ந்த 17வயது சிறுவன், பவன்பிரகாஷ்(19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மத்திகிரி போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News