உள்ளூர் செய்திகள் (District)
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு குன்னூர் பள்ளி மாணவ, மாணவிகள் 68 பேர் தேர்வு
- மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.
- வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் விளையாட்டு ேபாட்டி நடைபெறவுள்ளது.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
குறிப்பாக கைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், ஆக்கி, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.
இவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி வரும் நிலையில் குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 68 மாணவ, மாணவிகள் தற்போது மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் நடைபெற உள்ள மாநில விளையாட்டுப் போட்டிகளில் இந்த மாணவ - மாணவிகள் பங்கேற்பதற்காக தற்போது குன்னூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.