உள்ளூர் செய்திகள் (District)

நீலகிரி புத்தக திருவிழாவில் 10 நாளில் ரூ.9 லட்சம் புத்தகங்கள் விற்பனை

Published On 2023-10-30 09:39 GMT   |   Update On 2023-10-30 09:39 GMT
  • மாணவிகள் உள்பட 13200 பேர் பங்கேற்றனர்
  • ஒரு நூல், நல்ல நண்பனுக்கு சமம் என கலெக்டர் பேசினார்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது.

இந்தநிலையில் நீலகிரி புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். நகைச்சுவை இமயம் சண்முகவடிவேல் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து நீலகிரியை சேர்ந்த இலக்கிய சொற்பொ ழிவாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் 16 பேருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலெக்டர் அருணா பேசியதாவது:-

ஊட்டி என்பது இயற்கை எழிலுக்கு மட்டும் உரியது அல்ல. படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், பண்பாள ர்களுக்கும் உரித்தான பூமி. நாம் எத்தனை புத்தகங்கள் வாசிக்கிறோம் என்பதை பொருத்துதான் நம்முடைய அறிவு விசாலப்படும்.மேலும் வாசிப்பு பழக்கம் பொறுமையை போதிக்கும். கற்பனை ஆற்றலை பெருக்கும். படைப்பாற்றலை உருவாக்கும். மனி தனை மேன்மக்களாக்கும். எனவே அனுதினமும் வாசிப்போம்.

ஒரு நல்ல நூல், ஒரு நல்ல நண்பனுக்கு சமம். ஒருசில நேரங்களில் நண்பர்கள் கூட பகைவராக மாறலாம். ஆனால் புத்தகம் ஒருபோதும் பகைமை கொள்ளாது.

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் என்கிறார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.

இந்த புத்தக திருவிழா மாணவர்களுக்கு பள்ளி-கல்லூரி ஆண்டு விழாபோல மகிழ்ச்சி, குதூகலத்தை அள்ளி தந்து உள்ளது. இனிவரும் ஆண்டுகளிலும் நீலகிரி புத்தகத்திருவிழா பொதுமக்களின் ஆதரவுடன் சீரும் சிறப்பு மாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஊட்டி சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னூர் புனித அன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ-மாணவிகள் பங்கேற்ற வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கரகாட்டம், சமூக நாடகம் உள்ளிட்ட கலைநி கழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கண்டுகளித்தனர்.நீலகிரி 10 நாள் புத்தக திருவிழாவில் ஒட்டு மொத்தமாக 13200 பேர் பார்வையாளராக கலந்து கொண்டனர். இவர்களில் 6275 பேர் மாணவ-மாண விகள்.அவர்கள் ரூ.9.06 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி புத்தக திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு சுந்தரவடிவேல், மாவ ட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ்,ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்ற மாதன், ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ்,உதவி இயக்குநர்கள் இப்ராகிம்ஷா (பேரூரா ட்சிகள்), சாம்சாந்த குமார் (ஊராட்சிகள்), மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன், மாவட்ட நூலக அதிகாரி வசந்தமல்லிகா, ஊட்டி தாசில்தார் சரவண குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News