திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி
- 16 வயது சிறுமி நேற்று வயிற்று வலி
- ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரணை
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று வயிற்று வலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் பெற்றோரை இழந்த சிறுமி, உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்த நிலையில் உரிய வயதை எட்டியவுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் காதலனுடன் நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்து தெரியவந்தது.இதையடுத்து சிறுமியின் காதலன் மற்றும் உறவினர்களிடம் டவுன் மகளிர் போலீசாரும், மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் சிறுமிக்கும், அவரது குழந்தைக்கும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.