உள்ளூர் செய்திகள் (District)

பெண்ணை பின்தொடர்ந்த வாலிபருக்கு அடி உதை

Published On 2022-07-18 07:08 GMT   |   Update On 2022-07-18 07:08 GMT
  • கருக்கல்வாடி கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ரவி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.
  • 10 பேர் மீது வழக்கு.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் .கருக்கல்வாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (40). இவரை அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ரவி அடிக்கடி பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்த ரவி, நவீன், நல்லதம்பி, ஐயம்மாள், குமார், ராஜமாணிக்கம், காசி, செல்வி, வள்ளி, மோகன் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News