உள்ளூர் செய்திகள் (District)
சிதம்பரம் அருகே ஸ்டூடியோவில் இருந்த கேமரா திருட்டு
- மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த கேமிரா மற்றும் ஹார்டிஸ்க்குகளை மர்மநபர்கள் யாரோ திருடியுள்ளனர்
- சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (50). இவர் வண்டிகேட் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி இரவு கடையை பூட்டிச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த கேமிரா மற்றும் ஹார்டிஸ்க்குகளை மர்மநபர்கள் யாரோ திருடியுள்ளனர். இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் சிசிடிவி கேமிரா மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.