உள்ளூர் செய்திகள்
null

பாலியல் வன்கொடுமை வழக்கு: தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கிய தேசிய மகளிர் ஆணையம்

Published On 2024-08-21 06:59 GMT   |   Update On 2024-08-21 07:29 GMT
  • கிருஷ்ணகிரி சிறுமி வன்கொடுமை சம்பவத்திற்கு தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அளித்து வந்துள்ளார். அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News