உள்ளூர் செய்திகள் (District)
விற்பனைக்கு குவிந்த அலங்கார தோரணங்கள்
- ஜிகினா அலங்கார தோரணங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
சேலம்:
ஆயுத பூைஜயை முன்னிட்டு வீடு மற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சுத்தம் செய்து, தோரணங்கள் கட்டுவது வழக்கம். நடப்பாண்டு ஆயுதப்பூைஜ வருகிற 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் செவ்வாய்ப்பேட்ைட, பால்மார்க்கெட், கடைவீதி உள்பட பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்படும் ஜிகினா அலங்கார தோரணங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிகினா அலங்கார தோரணங்கள் சென்னை, சிவகாசி, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதை சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு ஜிகினா அலங்கார தோரணம் ரூ.10 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.