உள்ளூர் செய்திகள்

சுப்ரமணியன்.

மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

Published On 2022-11-03 09:50 GMT   |   Update On 2022-11-03 09:50 GMT
  • மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து கிடந்துள்ளது.
  • வயலுக்கு சென்ற சுப்பிரமணியன் அதை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பரவாக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன்.

கடந்த சில தினங்களாக மன்னார்குடி சுற்றுவட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுப்ரமணியன் தனது வயலில் தேங்கிய மழை நீரை வடிய வைப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது வயல் அருகே சென்ற மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து கிடந்துள்ளது.

சுப்பிரமணியன் எதிர்பாராத விதமாக மின் கம்பியை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து சுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் பரவாக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News