உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்க முயன்றவர் கைது

Published On 2022-11-08 09:28 GMT   |   Update On 2022-11-08 09:28 GMT
  • புகையிலை பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்து செல்ல தயார்.
  • ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்.

சீர்காழி:

சீர்காழி அருகே தைக்கால் கிராமம் ஜாகிர்உசேன் தெருவை சேர்ந்தவர் முஹம்மதுயாசின் (வயது 44).

இவர் தைக்காலில் உள்ள அவரின் வீட்டிற்கு அருகே அவருக்கு சொந்தமான காரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றி கடைகளுக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்துகொண்டிருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில், எஸ்.பி.யின் தனி பிரிவு படையினர் மற்றும் கொள்ளிடம் சிறப்பு பிரிவு போலீசார் திலகர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் விற்பனைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த முகமதுயாசினை கைது செய்து, காருக்குள் வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 14 மூட்டை புகையிலைப் பொருட்களை பறிமுதல்செய்தனர்.

Tags:    

Similar News