உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே கர்ப்பிணி இளம்பெண் மாயம்
- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- வீட்டில் இருந்த சினேகா தனது மாமியாரிடம் பொள்ளாச்சிக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி சென்றார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அருகே சமத்தூரை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது22). இவரது மனைவி சினேகா(20). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சினேகா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சம்பவத்தன்று மகேந்திரன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த சினேகா தனது மாமியாரிடம் பொள்ளாச்சிக்கு மருத்துவ பரிசோதனைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து மகேந்திரன் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கர்ப்பிணி பெண்ணை தேடி வருகின்றனர்