உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரியில் கடைக்குள் புகுந்த சாரைபாம்பு

Published On 2022-07-02 09:47 GMT   |   Update On 2022-07-02 09:47 GMT
  • பாபு அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
  • இவரது கடைக்குள் 13 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதை கண்ட பாபு அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார்.

அரவேணு:

கோத்தகிரி கூக்கல்தொரையை சேர்ந்தவர் பாபு. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இவரது கடைக்குள் 13 அடி நீள சாரை பாம்பு புகுந்தது. இதை கண்ட பாபு அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார். பாம்பு நேராக கடையில் இருந்த அலமாரிகளின் மேல் ஏறி பரணில் படுத்துக்கொண்டது.

இதுபற்றி அறிந்ததும் வாலிபர்கள் சிலர் கடைக்கு வந்து பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து பாம்பை வாங்கி சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Tags:    

Similar News