உள்ளூர் செய்திகள்

வேப்பூர் அருகே வாலிபர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-05-21 05:27 GMT   |   Update On 2023-05-21 05:27 GMT
  • தங்கதுறை சித்தேரி ஏரிக்கரைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
  • இது குறித்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

வேப்பூர் அருகே திருப்பையர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுறை (வயது 36)கூலித்தொழி லாளி. இந்நிலையில் நேற்று காலை அதே பகுதியிலுள்ள சித்தேரி ஏரிக்கரைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்த ஏரிக்க ரை ஓரம் நடந்து சென்ற தங்கதுறை திடீரென மயங்கி கீேழ விழுந்தார். இதனை யடுத்து தங்கதுறை உடன் சென்ற வாலிபர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன் உதவியுடன் அவரை மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு தங்கதுறையை பறிசோதித்த டாக்டர்கள் தங்கதுறை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர். இதுகு றித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கதுறையின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News