உள்ளூர் செய்திகள் (District)

முகமது கையூப்.

மங்கலம்பேட்டை அருகே கார் மோதி சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலி

Published On 2023-05-14 07:39 GMT   |   Update On 2023-05-14 07:39 GMT
  • வெங்கடேசன் சென்னையில் இருந்து காரில் விருத்தாசலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
  • இந்த விபத்தில் முகமது கையூப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

கடலூர்:

விருத்தாசலம் மங்கலம் பேட்டை அருகே உள்ள எறுமனூர் கிராமம், நடுத் தெருவைச் சேர்ந்த வெங்க டேசன் (வயது 40) என்பவர், சம்பவத்தன்று காரில், தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, மங்கலம் பேட்டை அருகே உள்ள பில்லூர் புறவழிச் சாலை அருகே கார் வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த மங்கலம்பேட்டை, ஷேக் நகர் பகுதியைச் சேர்ந்த நாசர் உசேன் மகன் முகமது கையூப் (19) என்பவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் முகமது கையூப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் முகமது கையூபை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முகமது கையூப் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News