உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் டாஸ்மாக் கடையில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு

Published On 2023-04-12 09:16 GMT   |   Update On 2023-04-12 09:16 GMT
  • கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுரேஷ்குமாரின் செல்போனை வாலிபர் திருடினார்.
  • சுரேஷ்குமார் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. அப்போது ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது43) என்பவரும் அங்கு மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுரேஷ்குமாரின் செல்போனை திருடி விட்டு தப்பித்து ஓடி விட்டார். இதுகுறித்து சுரேஷ்குமார் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் ராயபுரம் பகுதியை சேர்ந்த தீப்ஸ்வர் என்ற பிரில் (31) என்பவர் தெரியவந்தது. அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதன் அடிப்படையில் வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News