உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் ஒரே நாளில் பெற்றோரை இழந்த வாலிபர் தற்கொலை

Published On 2023-06-18 08:48 GMT   |   Update On 2023-06-18 08:48 GMT
  • சங்கர் ஒரு கல் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
  • கணவர் இறந்த செய்தி கேட்டதும் கல்யாணி மயங்கி விழுந்து இறந்தார்.

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி என்ற துரை. இவருடைய மகன் சங்கர் (வயது 28). இவர் ஒரு கல் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி மாயாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கணவர் இறந்த செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் சங்கரின் அம்மா கல்யாணி மாயாண்டி உடல் மீது மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனார். ஒரேநாளில் தாய்-தந்தையை இழந்த சங்கர் அன்று முதல் துக்கத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் செங்கோட்டை அருகில் இருக்கும் விஸ்வநாத புரம் கலங்காதகண்டி வாய்க்காலில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செங்கோட்டைபோலீசார் விரைந்து சென்று சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News