விருத்தாசலம் பகுதியில் சாராயம் கடத்திய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது: கடலூர் கலெக்டர் உத்தரவு
- விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார்.
- அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் மதுகடத்தல் சம்பந்தமாக சிறுபாக்கம் ஒரங்கூரிலிருந்து ஓலக்கூர் செல்லும் பாதையில் மா.கொத்தனூரில் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டார். அவர் 2 லாரி ட்யூப்களில் சுமார் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஒலங்கூர் சேர்ந்த சுதாகர் (வயது 39) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் 9 சாராய வழக்குகள் உள்ளன.
இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இராஜாராம் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.