உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசை- வன பத்ரகாளியம்மன், மாசாணி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-07-17 09:23 GMT   |   Update On 2023-07-17 09:23 GMT
  • பவானி ஆற்றில் குளித்து முன்னோர்களை வழிபட்டு அவர்களது ஆசியை பெற்றனர்.
  • அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

 மேட்டுப்பாளையம்,

ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வருகிற அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆடி மாத அமாவாசை தினத்தில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம்.

மேலும்,ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாகவே காணப்படும். அந்த வகையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

முன்னதாக பவானி ஆற்றில் குளித்து தங்களது முன்னோர்களுக்கு படையிலிட்டும், தர்ப்பணம் செய்தும் வழிபட்டு முன்னோர்களின் ஆசியினை பெற்றுச்சென்றனர்.

கோவை, திருப்பூர் ஈரோடு நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு ச்சென்றனர்.மேலும்,ஆடி அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்தும், படையலிட்டும் வழிபட்டால் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பதால் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்துள்ள நந்தவனம் பகுதியில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் தங்களது குடும்பத்தினருடன் காத்திருந்து பொதுமக்கள் முன்னோர்களின் ஆசியினை பெற்று சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் நந்தவனத்தின் செயலாளர் சிபிஎஸ் பொன்னுச்சாமி செய்திருந்தார்.

இதேபோல ஆனைமலை மாசாணியம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News