உள்ளூர் செய்திகள்

ஆடி மாத கிரிவலத்தில் கலந்து கொண்டவர்கள். 

ஆடி மாத பவுர்ணமி கிரிவலம்

Published On 2022-08-12 09:38 GMT   |   Update On 2022-08-12 09:38 GMT
  • இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
  • சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

சுவாமிமலை:

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று மாலை வல்லப கணபதி சன்னதியில் இருந்து தொடங்கியது.

இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார். சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்கோவி.கல்யாணகுமார், ஜெமினி, வரதராஜன், ஆசிரியர்கள் ஜெயராமன், கணேசன், சிவக்குமார், சுவாமிநாதன், ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சென்னை ஆஸ்கார் மீடியாஸ் மேனேஜிங் டைரக்டர் சாய்மோகன் பாலாஜி, மீனாட்சி பாலாஜி மற்றும் குடும்பத்தினர் உணவு வழங்கினர்.

Tags:    

Similar News