உள்ளூர் செய்திகள் (District)
உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தடைந்தார்
- வேலூரில் நாளை நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.
- உள்துறை மந்திரி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகள் மற்றும் தங்களுக்கு சாதகமாக உள்ள பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து இப்போதே பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்காக மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று இரவு சென்னை வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
வேலூரில் நாளை நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். உள்துறை மந்திரி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன