உள்ளூர் செய்திகள் (District)
- பாட்டாளி மக்கள் கட்சியை டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பதில் டாக்டர் அன்புமணி தீவிரமாக உள்ளார்.
- கட்சியில் உள்ள பழமையான, பாரம்பரிய தொண்டர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியை டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பதில் டாக்டர் அன்புமணி தீவிரமாக உள்ளார். இதை கருத்தில் கொண்டு கட்சியில் பல புதிய மாற்றங்களை செய்து வருகிறார்.
அதே சமயத்தில் கட்சியில் உள்ள பழமையான, பாரம்பரிய தொண்டர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனால் தான் கடலூர் மாவட்டத்தில் இவர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. என்றாலும் டாக்டர் அன்புமணி இன்னும் அதிக அதிரடி காட்ட வேண்டும் என்று பா.ம.க. அடிமட்ட தொண்டர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.