உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகத்தில் தருமபுர ஆதீனம் பங்கேற்றார்.

அண்டநாதர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-08-26 09:01 GMT   |   Update On 2022-08-26 09:01 GMT
  • கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நிறைவடைந்து கடந்த திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
  • கடங்கள் புறப்பட்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த அகிலாண்டேஸ்வரி உடனடியாக அண்டநாத சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நிறைவடைந்து திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

விழா அன்று நான்காம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு விமான கோபுர கலசம், சுவாமி, அம்மன் சன்னதிகள் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.

கும்பாபிஷேக விழாவில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி டாக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News