உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய காட்சி.

தூத்துக்குடியில் கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

Published On 2022-08-07 08:41 GMT   |   Update On 2022-08-07 08:41 GMT
  • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட அலுவலகத்தில் கருணா நிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, இளையராஜா சுரேஷ் காந்தி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாப்பிள்ளையூரனி ஊராட்சிமன்ற தலைவர் சரவணகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் புதுக்கோட்டை முத்துக்குமார், மற்றும் டி.டி.சி. ராஜேந்திரன், அந்தோணி ஸ்டாலின், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News