உள்ளூர் செய்திகள்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-19 10:01 GMT   |   Update On 2022-08-19 10:01 GMT
  • போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பயன்பாட்டை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
  • முக்கிய வீதிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் பேரூராட்சி நிர்வாகம், சோழபுரம் போலீஸ் நிலையம் மற்றும் சோழபுரம் சுகாதாரத்துறை இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சோழபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பயன்பாட்டை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து சோழபுரம் பேரூராட்சி தலைவர் கமலா செல்வமணி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.

தொடர்ந்து முக்கிய வீதிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரூர் நகர செயலாளர் ஜெப்ருதீன் மற்றும் துணை த்தலைவர் ரைஹானா பர்வீன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ராஜன் மற்றும் தேவேந்திரன், தலைமைஆசிரியர் மணிகண்டன்மற்றும் ஆசிரியர்கள், தன்னா ர்வலர்கள் கலந்துகொ ண்டனர்.

Tags:    

Similar News