வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் வீதி உலா
- 8-ம் நாள் விழாவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், எழுந்தருளினர்.
- இரவு அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சி கொடுத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்கத் திறக்கபாடும் வரலாற்று திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது
இந்த நிலையில்நேற்று எட்டாம் நாள் திருவிழாவில் அப்பர் சம்பந்தர் சுந்தரர் எழுந்தருளினர்கள்பின்பு அர்த்தநாரீஸ்வரர் படி இறங்கி ராஜ நாராயண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இரவு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி அப்பர் சம்பந்தர் சுந்தரருக்கு எழுந்தருளி காட்சி கொடுத்தார்பின்பு சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் மகர தோரணவாயில் உள்ள கதவிற்கு வெள்ளிகவசம் அமைத்துக் கொடுத்த சண்முகானந்தம் குடும்ப த்தினர் செய்திருந்தனர்.