- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது
- ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தேளூரில், ஊர் நாட்டாரும் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் தலைவருமாகிய கோவிந்தசாமி குடும்பத்தினர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ 1.85லட்சம் மதிப்பீட்டில் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி மற்றும் போர்வெல் உடன் மோட்டார் அமைத்து கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர் எழில் வரவேற்றார். அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுந்தரவடிவேல்,ஊராட்சி மன்ற தலைவி அழகம்மாள் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஏகேம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கதிர் கணேசன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து மாணவர்களுக்கு குடிநீரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவி கள்,நல்லாசிரியர் விளாங்குடி தியாகராஜன் ,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொறியாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.